| ஸ்கந்த சஸ்டி கவசம் மெட்டில் பாடுங்கள் : |
| காப்பு |
| அழைப்போர்க்கு அல்லல் போம்; துயரம் போம்; மனதில் |
| வைப்போர்க்கு வாழ்க்கை பெருகி வளம் ஓங்கும் |
| சித்தியும் சித்திக்கும் , அசோகர் அருள் |
| ஆனந்த சக்திக் கவசம் இதனை. |
| நல்லோர் துயர் தீர அசுரர் அழித்த |
| சக்தி அருள் நெஞ்சே குறி. |
| நூல் |
| நிலை மண்டில ஆசிரியப்பா |
| சக்தியை அழைக்க சடுதியில் வருவாள் |
| பக்தர்க்கு அருளும் பரமன் மனையாள் |
| பாதம் இரண்டில் கொலுசுகள் ஒலிக்க |
| கீதம் பாடும் கிண்கிணி சலங்கை …..004 |
| பைய நடனம் செய்யும் பைந்தமிழ் எழிலாள் |
| கையில் சூலத்தோடு காக்க இங்கு வந்து |
| வருக வருக மலையாள் வருக |
| வருக வருக மாண்புடன் வருக …..008 |
| எண்திசை வாழும் எண்மர் போற்ற |
| மண்தனை வளர்க்க சூலம் வருக |
| வளைக்கரம் வாழ்த்த வருக வருக |
| இன்பச் சிவனின் நினைவோள் வருக …..012 |
| ஆறுமுகனின் அம்மா வருக |
| குங்குமம் அணிந்து கூடவே வருக |
| சிறந்த மகளே சீக்கிரம் வருக |
| சக்தியின் உருவே சடுதியில் வருக ….016 |
| உமையவள் நீயே கிலி கிலி கிலி கிலி |
| அமைப்பவள் நீயே வழி வழி வழி வழி |
| வினைகள் அறுக்க வீரீ நமோ நம |
| கருணை வடிவே சரணம் சரணம் …..020 |
| தசரதன் மகளே வருக வருக |
| அசுரரை அழித்த அம்மா வருக |
| எந்தனை ஆளும் எளிழோள் கையில் |
| பதினேட்டாயுதம் பாசாங்குசமும் ….024 |
| கருணை விழிகள் கனிவுடன் திகழ |
| விரைந்தெனைக் காக்க விழியோள் வருக |
| ஐயும் கிளியும் அடைவுடன் சவ்வும் |
| உய்யொளி சவ்வும் உயிர் ஐயும் கிளியும் …..028 |
| கிளியும் சவ்வும் கிலரொளி ஐயும் |
| நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் |
| சக்தி நீயும் தனியொளி யவ்வும் |
| குண்டலி ஏறி குலமகள் வருக ……032 |
| அன்னை முகமும் அருள் கூறும் அழகும் |
| செவ்வொளி நெற்றியும் நெடிய புருவமும் |
| பதினெட்டுக் கையும் பவளச் செவ்வாயும் |
| நன்னெறி நெற்றியில் நவரத்ன சுட்டியும் …..036 |
| எழில் சேர் செவியில் இலங்கும் குண்டலமும் |
| அன்பும் கருணையும் அருளும் நெஞ்சில் |
| பல்வகை மணியும் பதக்கமும் தரித்து |
| நல்வகை சேர்ந்த நவரத்ன மாலையும் ……040 |
| உன்புகழ் பாடும் முத்தணி மார்பும் |
| செப்பழகுடைய திருவயிருந்தியும் |
| முருகனின் மடியில் சுடரொளிப் பட்டும் |
| நவரத்தினம் பதித்த நற்சீறாவும் ……044 |
| என் குகன் அமர்ந்த எழில் சேர் கால்களும் |
| சிறந்த கால்களில் கொலுசொலி இசைக்க |
| செககண செககண செககண செகண |
| மொகமொக மொகமொக மொகமொக மொகன …..048 |
| நகநக நகநக நகநக நகன |
| டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண |
| ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் |
| ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ……052 |
| க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம் |
| டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு |
| உயிர்ச் சக்தி அவளே உள்ளே இருப்பாள் |
| முந்து முந்து முன்னாள் முந்து …..056 |
| எந்தனை ஆளும் என்னுயிர் அம்மா |
| மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவு |
| லாலா லாலா லாலா வேசமும் |
| லீலா லீலா லீலா வினோதம் என்று …..060 |
| உன் திருவடியை உறுதியாய் பற்றி |
| என்தலை வைத்தேன் இணையடி காக்க |
| என்னுயிர்க்கு உயிரே என் அம்மா காக்க |
| பண்புடை விழியால் என்னைக் காக்க ……064 |
| அடியவன் வதனம் எழில் சூல் காக்க |
| சிகப்பு சேர் நெற்றியை சீர் சூல் காக்க |
| கலங்கும் கண்களை கருஞ் சூல் காக்க |
| செவிகள் இரண்டும் செஞ் சூல் காக்க …..068 |
| நாசிகள் இரண்டும் நல் சூல் காக்க |
| பேசும் வாய்தனை பெருஞ் சூல் காக்க |
| முப்பத்திருபல் முனி சூல் காக்க |
| செந்தமிழ் நாவை செஞ் சூல் காக்க …..072 |
| கன்னம் இரண்டை கதிர்சூல் காக்க |
| என்னிளம் கழுத்தை இனி சூல் காக்க |
| மார்பை ரத்ன வடி சூல் காக்க |
| சேர்ந்த நெஞ்சினை நேர் சூல் காக்க ……076 |
| வடிசூல் இருதோள் வனப்புடன் காக்க |
| பிடரிகள் இரண்டும் பெரும் சூல் காக்க |
| அழகிய முதுகை அருள் சூல் காக்க |
| பளு பதினாறும் பரு சூல் காக்க …..080 |
| வெற்றி சூல் வயிற்றை விளங்கவே காக்க |
| சிற்றிடை அழகுற செஞ் சூல் காக்க |
| அரை ஞான் கயிற்றை அருள் சூல் காக்க |
| ஆண் பெண் குறிகளை அழகு சூல் காக்க ……084 |
| பிட்டம் இரண்டும் பெரும் சூல் காக்க |
| வட்டக் குதத்தை வல் சூல் காக்க |
| பனைத் தொடை இரண்டும் பரு சூல் காக்க |
| கணைக்கால் முழங்கால் கதிர் சூல் காக்க ……088 |
| ஐவிரல் அடியினை அருள் சூல் காக்க |
| கைகால் இரண்டும் கருணை சூல் காக்க |
| முன்கை இரண்டும் முரண் சூல் காக்க |
| பின்கை இரண்டும் பின்னவள் இருக்க ……092 |
| நாவில் சரஸ்வதி நற்துனை ஆக |
| நாபிக் கமலம் நல்சூல் காக்க |
| முப்பால் நாடியை முனை சூல் காக்க |
| எப்பொழுதும் என்னை எதிர் சூல் காக்க …..096 |
| அடியேன் வசனம் அசைவுள நேரம் |
| கடுகவே வந்து கனக சூல் காக்க |
| வரும் பகல் தன்னில் வச்ர சூல் காக்க |
| அரை இருள் தன்னில் அரும் சூல் காக்க ……100 |
| ஏமத்தில் சாமத்தில் எதிர் சூல் காக்க |
| தாமதம் நீக்கி சதுர் சூல் காக்க |
| காக்க காக்க கனக சூல் காக்க |
| நோக்கும் போதே நோய்கள் நீங்கும் …..104 |
| தாக்கும் போதே தடைகள் தகரும் |
| பார்க்கும் போதே பாவம் அழியும் |
| பில்லி சூன்யம் பெரும்பகை அகலும் |
| வலிய பூதம் வாலாட்டும் பேய்கள் ……108 |
| அல்லல் தருகின்ற அடங்கா முனிகள் |
| பிள்ளைகள் கொல்லும் பின்வீட்டு பேயும் |
| கொள்ளிக்கண் பேய்களும் குணங்கெட்ட பேய்களும் |
| பெண்களைத் தொடரும் பேதைப் பேய்களும் ……112 |
| அடியனைக் கண்டால் அங்கேயே அழிந்திட |
| இரத்தக் காட்டேரி இறுமாப்பு படைகள் |
| இரவிலும் பகலிலும் எதிர் வரும் தீயரும் |
| கண்டதும் உண்ணும் காளியோடு அனைத்தும் …..116 |
| விடாது தொடரும் வினை மிகு பேய்களும் |
| தண்டியம் செய்யும் சண்டாளர்களும் |
| என் பெயர் கேட்டதும் இடி விழுந்து நடுங்கிட |
| அறியாது வைக்கும் அற்பப் பொம்மைகள் …..120 |
| பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் |
| கைகால் நகங்களும் மண்டை ஓடும் |
| பொம்மைகள் உடனே பானையில் வைத்த |
| வீட்டினில் வைக்கும் வினை பிடித்தோர்கள் …..124 |
| பொம்மையில் ஆணியை அடித்தே வைத்து |
| காசு பணத்துடன் சோற்றையும் வைத்து |
| குங்குமம் ஜபித்து கூடவே வைத்தோர் |
| அடியேனைக் கண்டால் அலறி அழிந்திட ……128 |
| பகையும் தீயோரும் வந்து வணங்கிட |
| எமனின் ஆட்கள் எழுந்து ஓடிட |
| பயந்து அழுது பாய்ந்து ஓடிட |
| மனமும் கலங்கி மறைந்து ஓடிட …..132 |
| கற்களில் முட்டி கயற்றால் கட்டி |
| உடம்பெல்லாம் நோக உடனே கட்டு |
| எலும்புகள் உடைய எட்டி உதைத்து |
| கட்டும் கட்டில் கைகால் நொறுங்க …..136 |
| அடிக்கும் அடியில் கண்கள் வெளிவர |
| சிறு சிறு துண்டாய் சீவிப் போடு |
| அரு அரு என்றே பகையை அறுத்திடு |
| சொருகு சொருகு சூலம் சொருகு …..140 |
| நெருப்பு அவர்கள் நெஞ்சில் பற்றிட |
| எரியட்டும் நெருப்பு என்றென்றும் அங்கே |
| சூலத்தை எறிவாய் சூழ்ந்தது ஓட |
| புலிகள் நரிகள் பொல்லாத நாய்கள் …..144 |
| எலிகள் கரடிகள் எல்லாம் ஓட |
| தேள்கள் பாம்புகள் சீயான் பூரான்கள் |
| பாழ் பட்டுப் போன பூச்சிகள் கடித்து |
| ஏறிய விஷமும் உடனே இறங்க ……148 |
| காயங்கள் சுளுக்குகள் கதறும் தலைவலி |
| வாதம் காய்ச்சல் வலிப்பு நோய்கள் |
| சூலை சயம் குன்மம் சொரியும் சிரங்கும் |
| வலிகள் புண்கள் வயற்று நோய்கள் …..150 |
| ராஜ பிளவைகள் ராத்திரி நோய்கள் |
| பூனை நாய் சிலந்திக் கடிகள் |
| பல்வலி அரணை ஆப்புக் கட்டிகள் |
| எல்லா நோய்களும் என்னைக் கண்டதும் ……154 |
| கதறி ஓட கருணை புரிவாய் |
| அனைத்து உலகமும் அன்புடன் உறவாட |
| ஆண் பெண் அனைவரும் நட்பாக |
| நாட்டை ஆள்வோரும் நட்புடன் உதவ …..160 |
| உன்னை நம்பி உன் பெயர் சொல்ல |
| சக்தியும் நீயே சகலமும் நீயே |
| திரிபுர சுந்தரி தினமும் நீயே |
| சப்தமும் நீயே சலனமும் நீயே …..164 |
| விஷ்ணுவின் தங்கை வேந்தனின் மங்கை |
| தேவரைக் காக்க திரிசூல் எடுத்தாய் |
| மாந்தரைக் காக்கும் மகிமை அவளே |
| காலனை அழித்து ககனம் காப்பாய் …..168 |
| எல்லோரையும் காக்க இப்போதே வருவாய் |
| தணிகையை ஆளும் சங்கரன் மனையாள் |
| காஞ்சி நகர் அமர் காமாக்ஷி தாயே |
| மதுரை அரசாலும் மாபெரும் அரசி …..172 |
| கருக்காவூர் காத்த கருணைத் தெய்வம் |
| மாங்காடு அமர்ந்த மங்கையர்க்கரசி |
| காசியில் சிரிக்கும் விசாலாக்ஷி தாயே |
| கலைகளின் அரசி கலைமகள் என்றும் ….176 |
| என்னிடம் இருக்க நான் தினம் பாட |
| என்னுள் இருக்கும் எந்தன் தாயை |
| பாடுவேன் தினமும் பைந்தமிழ் மொழியால் |
| ஆடினேன் பாடினேன் ஆனந்தத்தாலே ……180 |
| கொஞ்சும் அழகுடன் குங்குமம் அணிய |
| பாழும் வினைகளும் பாவமும் நீங்கி |
| உன் அடி சேர உன் அருளாலே |
| அன்புடன் தருவாய் கல்வியும் செல்வமும் …..184 |
| நல்ல வாழ்வும் நலமும் பிறவும் |
| சீரும் சிறப்பும் சித்திகள் பெருக |
| வாழ்க வாழ்க வளைக்கரம் வாழ்க |
| வாழ்க வாழ்க திரிசூல் வாழ்க ……188 |
| வாழ்க வாழ்க மதுரைக்கு அரசி |
| வாழ்க வாழ்க வாழ்த்தும் சிவனுடன் |
| வாழ்க வாழ்க சிம்மம் ஏறினாள் |
| வாழ்க வாழ்க என் துயரங்கள் நீங்க …..192 |
| ஏதேனும் பிழைகள் ஏதேனும் தவறுகள் |
| ஏதேனும் குறைகள் செய்திருந்தாலும் |
| பெற்றவள் நீதான் பொருப்பவள் நீதான் |
| தந்தை சிவன்தான் தாயும் நீதான் ….196 |
| உன் பிள்ளை என்மேல் அன்பாய் இருந்து |
| உன் மகன் என்மேல் உயிராய் இருந்து |
| உன்னிடம் வந்தோர் உயர்ந்திட வழி செய் |
| ஆனந்த சக்தி கவசம் விரும்பிய ….200 |
| அசோக ஆனந்த சித்தன் பகர்ந்ததை |
| காலையில் மாலையில் கவனமாய் தினமும் |
| நன்றாய் குளித்து நல் துணி அணிந்து |
| நினைவு தடுமாறாது நிற்கும் நிலையில் …..204 |
| ஆனந்த சக்திக் கவசம் இதனை |
| சிந்தை ஒன்றாகி தியானிப்பவர்கள் |
| ஒரு நாள் முப்பத்தாறுருக்கொண்டு |
| ஓதியே ஜபித்து சிகப்பும் அணிய …..208 |
| எட்டுத் திக்குள்ள எண்மரும் அடங்குவர் |
| செயல்களில் எல்லாம் வெற்றியை தருவர் |
| எதிரிகள் எல்லாம் எப்போதும் வணங்குவர் |
| சூரியன் முதலோர் சூழ்ந்து உதவுவர் ……212 |
| எப்போதும் என்றும் இளமையாய் வாழ்வர் |
| என்றும் பதினாறாய் எப்போதும் இருப்பர் |
| அன்னையின் கையிலுள்ள அருள் சூலத்தை |
| பாதையாய் வைத்து பயணம் செய்க …..216 |
| கண்ணால் காண கடும் பேய் ஓடும் |
| தீயோரெல்லாம் தீய்ந்து கருகுவர் |
| நல்லவர் நெஞ்சில் நாளும் நிற்கும் |
| அல்லவர் தீயோர் அழிக்கும் சூலை …..220 |
| எந்தன் உள்ளம் எந்நாளும் அறிந்து |
| வீரலக்ஷிமை விரும்பிடும் தினமே |
| சூரனை அழித்து துன்பம் நீக்கி |
| தேவர்களுக்கு தேனின்பம் தந்து …..224 |
| காஞ்சிபுரத்தில் கடும் தவம் செய்த |
| செல்லக் கால்களில் சேர்வோம் இன்றே |
| என்னை ஆட்கொண்டு எந்தன் நெஞ்சில் |
| எப்போதும் இருக்கும் அம்மா போற்றி …..228 |
| தேவர்கள் நெஞ்சில் வாழ்வாய் போற்றி |
| பரமனின் நெஞ்சின் மகிழ்வே போற்றி |
| அருள் மிகு அழகு அம்மா போற்றி |
| அரக்கரை அழித்த அன்பே போற்றி …..232 |
| காமாக்ஷி போற்றி கருணை போற்றி |
| வெற்றி பெறுகின்ற சூலே போற்றி |
| திரிபுரசுந்தரி புவனத்தரசி |
| ஸிம்ஹவாஹிநி சீரடி சரணம் …..236 |
| சரணம் சரணம் அம்மா சரணம் |
| சரணம் சரணம் சக்தியே சரணம் |
Saturday, December 3, 2011
anantha sakthi kavasam lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment