anantha sakthi kavasam

anantha sakthi kavasam

wav file for low mb and easy download

anantha sakthi kavasam mp3

anantha sakthi kavasam

chanted continuously to get full spiritual energy. close your eyes. hear the song. your brain will begin to emit alpha waves. you will get alpha mind power. ask anything in that transcendental stage you will get. write to me for doubts. I will guide you.

ஆனந்த சக்தி கவசத்தை பாடி மகிழுங்கள்

கந்த சஸ்டி கவசம் மெட்டில் ஆனந்த சக்தி கவசத்தையும் பாடி மகிழுங்கள்.மகனுக்கு ஒரு பாட்டு இருப்பதுபோல் அம்மாவுக்கும் ஒரு பாட்டு வேண்டும் அல்லவா.

you are

visitor

Tuesday, January 11, 2011

ஸ்கந்த சஸ்டி கவசம்

kantha sasti kavasam (tamil devotional hymn) written in tamil for easy reading.
எனது ஆனந்த சக்தி கவசத்தை டிரான்ஸ்லிடரெட் பண்ணும் போது தான்
கவனித்தேன். நமக்கெல்லாம் குருவாய் தேவநேயப் பாவாணர் இருந்து
நமக்கு தந்த ஸ்கந்த சஸ்டி கவசம் நெட்டில் எல்லோரும் படிக்கும்படி
இல்லை என்று தெரிந்தது. யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் என்று
வேறு ஒருத்தர் ஒரு பாரத்தில் எழுதியிருந்தார் . அதன் உள்ளே
போனபோது ஸ்க்ரிப்ட் டாட் காமில் போகச்சொல்லி வந்தது. போனால்
ஸ்க்ரிப்ட் டாட் காம் மில் உள்ளது ஐ பேப்பர் ஆய் உள்ளது. அதனை
காப்பி பேஸ்ட் செய்தல் இயலாது. அப்படியே பி டி எப் பார்மாட்டில்
டவுன்லோட் பண்ணினாலும் காப்பி பேஸ்ட் பண்ணும்போது

¸ó¾÷ ºŠÊ ¸Åºõ


என்று முருகன் மாறு வேடத்தில் வந்தது போல் வரும் .
என்னையாது ஜிலேபியைப் பிச்சுப் போட்டிருக்காங்க என்று விவேக்
விஜய்யிடம் சொல்வது போல் புலம்பி , வாழ் வாழ் என்று
கத்தாமல் வாழ்க கம்ப்யுட்டர் என்று சொல்லிவிட்டு இதோ எல்லோருக்கும்
பயன்படுமாறு எச் ட்டி எம் எல் பார்மாட் டில்
சுலேகாவிற்கு வரும் நமது சகோதரர்களுக்காக
கீழே ஸ்கந்த சஸ்டி கவசம்.

(சில பதிப்புகளில் ஸ்கந்த சஸ்டி கவசத்தை ஐந்து ஐந்து வரிகளாய் பதம் பிரித்து எழுதியுள்ளனர். அது பாடும்போது ஓசை இசை சந்தம் ஆகியவைகளை கெடுக்கும் என்பதால் நான்கு நான்கு வரிகளாகவே பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

(அதே போல் ஸ்கந்த சஸ்டி கவசம் இசை வடிவில் உள்ளதை கேட்கும்போது இடை இடையே கருவிகள் இசை சேர்க்கப்பட்டுள்ளது. (வயலின், கிட்டார், வீணை, புல்லாங்குழல் முதலியவை.) சஸ்டி கவசம் கேட்டுக்கொண்டே தியானம் செய்பவர்கள் கவசம் கேட்கும் போது குண்டலினி மேலே ஏறுவதையும் கருவிகள் இசையின் போது குண்டலினி கீழே இறங்கி நினைவு மனம் விழித்துக் கொண்டு சுற்றியும் நடக்கும் சப்தங்கள் முதலியவைகளை கவனிக்க ஆரம்பித்து விடுவதையும் அனுபவத்தில் உணரலாம். எனவே இனி இசை அமைப்பவர்கள் கருவிகள் இசை இல்லாமல் தொடர்ந்து கவசம் மட்டுமே கேட்குமார்ப்போல் இசை அமைக்கும்படிக்காய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கவசம் முடிவதற்குள் உடம்பு மரக்கட்டை போல் ஆவதை அனுபவத்தில் உணரலாம்.)

பாட்டு முடிவதற்குள் பாதிப்பேர் சாமியாடுவார்கள் சந்தேகமேயில்லை
முருகன்னா சும்மாவா

இசைத் தட்டு முதலியவைகளில் கேட்காமல் புஸ்தகத்தில்லிருந்தே
நேரடியாக படிக்கும்போது இடை இடையே நிறுத்தாமல் வேகமாகச்
சொல்பவர்களுக்கு உடல் மரத்துப் போவதை அனுபவத்தில் உணரலாம்.
அட்ரினலின் குறைந்து அட்ரோபின் அதிகமாகி விட்டது என மகிழுங்கள்.

(தபேலா முதலிய தாளக் கருவிகள் கூடவே நடையைக் காட்டிக்கொண்டு
வரலாம். தப்பில்லை. நல்லதுதான்.)

***********

துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம் ; நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையும் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந்தனை .

குரல் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி

நூல்

நிலை மண்டில ஆசிரியப்பா

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
மையல் நடஞ் செயும் மயில் வாகனனார்

கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதாலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேச குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறு இடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரஹந பவனார் சடுதியில் வருக
ரஹந பவச ரரரர ரரர
ரிஹந பவச ரிரி ரிரிரி
விணபவ ஸரஹ வீரா நமோ நம
நிபவ சரஹந நிற நிற நிறென

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்ட இலங்க

விரைந்தெனைக்காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சவ்வும் உயர் ஐயும் கிலியும்
கிலியும் சவ்வும் கிளரொளி ஐயும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் ரீயும் தனி ஒளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறு இடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணி சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷனமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்து அணி மார்பும்
செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீறாவும்
இருதொடை அழகும் இணை முழநதாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடு டுடு டுடு டுடு டுடு டுடு டுடுடு
டகுடிகு டிகுடுகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேல் முந்து
என்றனை ஆளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று

உன்திருவடியை உறுதிஎன்று எண்ணும்
என்தலை வைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழு பதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பனைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நல்துணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்க தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஸ் டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட
ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டு அலறி மதி கேட்டு ஓட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணல் அது ஆக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்து

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைகால் சிலந்தி
பற்குத்தரணை பரு அறையாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனை கண்டால்
நில்லாதோட நீஎனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணால் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
ஸரஹந பவனே சை யொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவன் ஒழி பவனே
அரிதிரு மருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழனி பதிவாழ் பால குமாரா
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் நான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்

சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்த் பிரியம் அளித்து
மைந்தன் என்மீது உன் மனம் மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆச்சாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது ஆகி
கந்தர் சஸ்டி கவசம் இதனை

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாருறு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்ட திக் குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்து அடி

அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துனவாக
சூரபத்மாவை துணித்தகை அதனால்
இருபத்தேழ்வர்க்கும் உவந்தமிழ்தளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்

சின்னக்குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொண்ட என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் போற்றி

மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் ஸரஹந பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...

No comments:

Post a Comment